நபி(ஸல்) கனவில் வரமாட்டார்கள்…?

ஒரு மனிதர் இறை நேசராக ஆகுவதற்குரிய அடையாளங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண்பதாகும் என்று முஸ்லிம்களில் பலர் நம்பிக் கொண்டிக்கிறார்கள். சில புத்தங்களில் கூட இந்தக் கருத்தை எழுதியும் வைத்துள்ளார்கள்.

ஒரு மனிதர் ‘நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன்’ என்று கூறினால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மத்தியில் அவர்மீது மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் கூட கூடுகிறது. அவர் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று கூட முஸ்லிம்களில் பலர் எண்ணிக் கொள்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மீது தங்கள் உயிரை விட அதிக மதிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களை காண முடியாததை பெரும் இழப்பாகவே கருதி வருகிறார்கள். இந் நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது அவர்களைப் பொருத்தவரை பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இதனால் கூட நபியை கனவில் கண்டதாக கூறும் நபரின் அந்தஸ்து கூடுகிறது.

நபியை நேரில் காண்பதாலோ அல்லது கனவில் காண்பதாலோ ஒருவருக்கு மார்க்க ரீதியாக எத்தகைய பலனும் ஏற்படப் போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த போது நேரில் பார்த்த எத்துனையோ பேர் ஈமான் கொள்ளவில்லை. நேரில் பார்த்து ஈமான் கொண்டவர்களில் சிலர் கூட அவ்வப்போது சந்தர்ப்பவாதிகளாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுவெல்லாம் வரலாற்று உண்மை. எனவே ஒருவர் நபியைக் காண்பதால் அவரிடம் இறைநம்பிக்கை மற்றும் கொள்கை ரீதியாக எத்தகைய முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரத்யேகமாக முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் காண்பது பற்றி முஸ்லிம்களிடம் ஒரு உணர்ச்சிப் பூர்மான மனநிலை நீடிப்பதற்கு காரணம் கீழே இடம் பெறும் ஹதீஸ்களேயாகும்.

என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னையேக் கண்டார் என் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்பது நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி (முஸ்லிம் – திர்மிதி)

இந்தக் கருத்தை வலியுறுத்தி வார்த்தை மாறாமல் புகாரியில் ஏராளமான இடங்களில் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் ‘என்னைக் கனவில் கண்டவர் என்னையேக் கண்டார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ‘ஒருவர் ஒரு கனவுக் காண்கிறார். அதில் ஒரு மனிதர் வருகிறார் நான் தான் முஹம்மத் இறைவனின் தூதர்’ என்றுக் கூறுகிறார். சில கட்டளைகளை இடுகிறார் (மதினாவில் கனவுக் கண்டு வினியோகிக்கப்பட்ட நோட்டீஸ்கள் இதற்கு உதாரணம்) கனவில் வந்தவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்து விட்டதால் கனவுக் காண்பவர் ஏகத்துக்கும் அக மகிழ்ந்து கனவின் கட்டளையை சிரம்மேல் கொண்டு செயல்படுத்த முனைவதோடு இறைத்தூதரைக் காணும் பாக்கியம் கிடைத்து விட்டதால் தன்னை மதிப்பிற்குரியவராகவும் கருதத் துவங்கி விடுகிறார். தனக்கு வந்த ஒரு கனவை ஆதாரமாக் கொண்டு அதன் பின்னர் மார்க்கக் காரியங்களில் மனதில் தோன்றியதையெல்லாம் செய்ய துணிந்து விடுகிறார்.

இதற்காக அவர் எடுத்து வைக்கும் வாதம் ‘நான் இறைத்தூதரைக் கனவில் கண்டேன். வந்தது இறைத்தூதர் தான் ஏனெனில் ‘என் வடிவில் ஷெய்த்தான் வர மாட்டான்’ என்று அவர்களே கூறியுள்ளதால் கனவில் வந்தது நபி(ஸல்) அவர்கள் தான்.’ என்ற வாதமே அவரிடமிருந்து வெளிப்படும்.

கனவில் மார்க்கக் காரியங்களோ, கட்டளைகளோ வர முடியாது என்பதை நாம் ஏற்கனவே ‘வண்ண வண்ணக் கனவுகள்’ கட்டுரையில் தக்க ஆதாரங்களுடனும் தகுந்த வாதங்களுடனும் விளக்கியுள்ளோம். இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபி(ஸல்) கனவில் வந்து மார்க்க விஷயங்களை அறிவிப்பதாக நம்புவது அவர்களின் தூதுத்துவப் பணிக்கே இழுக்கு என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும்.

அப்படியானால் கனவில் நபி(ஸல்) அவர்கள் வருகிறார்கள். சில காரியங்களைச் சொல்கிறார்கள் என்பதன் நிலவரம் தான் என்ன?

முதலில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் என்ன சொல்கிறது என்பதை விளங்குவோம்.

குறிப்பிட்ட ஹதீஸில் ‘என் வடிவில் ஷெய்த்தான் வராமட்டான்’ என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். ‘என் வடிவில்’ என்பதில் தனது வடிவத்தை நபி(ஸல்) பிரதானப்படுத்தியுள்ளதால் அவர்களின் வடிவில் ஷெய்த்தான் வர முடியாது என்பது தான் உண்மையே தவிர வேறு வடிவத்தில் வந்து நபி(ஸல்)அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடையில்லை. தடுக்கப்பட்டுள்ளது முஹம்மத்(ஸல்) அவர்களின் வடிவம் தானே தவிர அவர்களின் பெயரல்ல.

கனவில் வரக் கூடிய ஷெய்த்தான், மக்கள் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கற்பனை செய்து வைத்துள்ள வடிவில் வந்து ‘நான் தான் முஹம்மத்’ என்று சொல்லுவதற்கு தங்கு தடையின்றி வாய்ப்பு உண்டு. முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் கண்டதாகக் கூறுபவர்களிடம் ‘அவர்கள் எப்படி இருந்தார்கள்’ என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அவர்கள் வர்ணிக்கும் வர்ணனைக்கும் நபி(ஸல்) அவர்களின் உருவ அமைப்புப் பற்றி வரும் அறிவிப்புகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமிருக்காது.

நபி(ஸல்) கனவில் வந்தார்கள் என்பது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமான வாதம் என்றாலும் ‘தன் உருவில் ஷெய்த்தான் வரமாட்டான்’ என்று சொன்ன நபி(ஸல்) இது பற்றி கூடுதலாக விளக்கியுள்ளதையும் இங்கு எடுத்துக் காட்டுவோம்.

யார் என்னைக் கனவில் கண்டாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என் வடிவில் ஷெய்த்தான் வரமாட்டான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா (ரலி) புகாரி,முஸ்லிம்.

கனவில் என்னைக் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது ஒரு முன்னறிவிப்பாகும்.

நபி(ஸல்) அவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும் போது காணக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள் அல்லது காணும் வாய்ப்பைப் பெறுபவர்கள் இவர்களுக்கான முன்னறிவிப்புதான் அது.

பொதுவாக எல்லா காலக்கட்டத்திலும் நபி(ஸல்) அவர்களைக் கணவில் காண முடியும் என்று யாராவது வாதிட்டால் ‘அவர் என்னை நேரிலும் கண்பார்’ என்று நபி(ஸல்) சொன்னதை அவர் பொய் படுத்தி விடுகிறார் என்ற நிலைதான் உருவாகும்.

‘அவர் விழிப்பிலும் (நேரிலும்) என்னைக் காண்பார்’ என்ற அறிவிப்பிலிருந்து நேரில் காணும் வாய்ப்பில்லாத எவரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது என்பதை தெளிவாக விளங்கலாம்.

எனவே இன்றைக்கு யாரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது. யாராவது கனவில் கண்டதாகக் கூறினால் நபி(ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி ஷெய்த்தான் அவரிடம் விளையாடியுள்ளான் என்பதை சட்டென்று புரிந்துக் கொள்ள வேண்டும். அதை அவருக்கு விளக்கவும் வேண்டும்.

நபி(ஸல்) கனவில் வந்து ‘நீ இஸ்லாத்தைத் தழுவு’ என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானதாகும். இஸ்லாம் என்பது உலக மக்களுக்கென்று ஒரு கொள்கையை முன் வைத்துள்ளது. அந்தக் கொள்கைப் பற்றி விவாதிக்கச் சொல்கிறது – விளக்கம் பெறச் சொல்கிறது. அது சரி என்று விளங்கும் பட்சத்தில் அதை ஏற்று முஸ்லிமாக சொல்கிறது. ஒருவரின் தோற்றமோ அவர் இடும் கட்டளையோ இஸ்லாத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலல்ல.

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். (அல் குர்ஆன் 4:113)

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் (அல் குர்ஆன் 4:115)

இந்த இரண்டு வசனங்களையும் படித்து சிந்தியுங்கள். இறை நம்பிக்கை என்பது இறை அருளால் அவன் கற்றுக் கொடுக்கும் கல்வியால் ஏற்படுவதாகும் என்பதை இந்த வசனங்கள் சுட்டிக் காட்டுகிறது. முதலாவது வசனத்தில் ‘நபியே.. நீர் அறியாமலிருந்தவற்றை அவன் கற்றுக் கொடுத்தான்’ என்கிறான். இரண்டாவது வசனத்தில் ‘நேர்வழி இன்னதென்று தெளிவாக தெரிந்தப் பின்னர்..’ என்கிறான். நேர்வழிப் பெற வேண்டுமானால் அதன் கொள்கையைக் கற்க வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கனவில் வந்து ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்’ என்று கூறுவதெல்லாம் ஒரு கொள்கையை விளக்கும் முறையோ – அழகோ கிடையாது. இஸ்லாம் அதை விரும்பவும் இல்லை.

நபி(ஸல்) கனவில் வந்து கட்டளையிட்டார்கள், இஸ்லாத்தை ஏற்கும் படி கூறினார்கள் என்று எடுத்து வைக்கும் இதே வாதங்கள் கிறிஸ்த்தவர்களிடமும் இருக்கிறது. கிறிஸ்த்துவத்தை தழுவுபவர்களில் கனிசமானவர்கள் ‘ஏசுவை நான் கனவில் கண்டேன். அவர் தான் என்னை கிறிஸ்த்துவத்திற்கு வரும்படி கூறினார்’ என்றே கூறுகிறார்கள். இஸ்லாத்தை போதிக்க வந்த ஈஸா(அலை) (இயேசு) இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையின் பக்கம் யாரையும் அழைப்பார்களா.. ஆனால் அந்த மக்கள் ‘கனவில் வந்தது இயேசு தான்’ என்று நம்புகிறார்கள். இது போன்ற கொள்கையற்ற நம்பிக்கைகள் இஸ்லாத்தில் தனது பெயரால் வந்து விடக் கூடாது என்பதால் தான் ‘என்னைக் கனவில் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார்’ என்று முன்னறிவிப்பு செய்து வெறும் கனவை ஆதாரமாகக் கொள்ள வேண்டாம் என்பதை அறிவுறுத்திச் சென்றுள்ளார்கள். எனவே நபி(ஸல்) கனவில் வருவார்கள் என்று நம்புவது ஆதாரமற்ற வெறும் யூகமேயாகும்.

ஆக்கம்: ஜி.நிஜாமுத்தீன்

நன்றி: இதுதான் இஸ்லாம்.காம்

_________________
வாசகராய் வருக

வாசகர் வட்டத்தில் இணைக

Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தூதுத்துவ செய்தி

தூதுத்துவ செய்தி உங்கள் பார்வைக்கு…

_______________
வாசகராய் வருக

வாசகர் வட்டத்தில் இணைக

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மனித கற்பனை கடவுளை கொச்சைப்படுத்தலாமா..?

*) மனித கற்பனை கடவுளை கொச்சைப்படுத்தலாமா..? *) தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலையா..? *) உயர்ந்த மனிதன்! தாழ்ந்தக் கடவுள்!! *) பலவீனங்களே கூட்டாச்சியைப் பற்றி சிந்திக்கும்! *) பல கடவுள்கள் – பல மனிதர்கள்……?

பதில்கள்: வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை’ என்றக் கொள்கையை ஏற்று அதன் படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல். இந்தக் கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டாலும் இந்தக் கொள்கை சரியானதுதான் என்று கருதுபவர்களும் கோடிக்கணக்கில் உள்ளனர்.

‘வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை’ என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் ‘லா இலாஹ இல்லா அல்லாஹ்’ என்று வரும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் ‘முஸ்லிம்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். முஸ்லிம் என்ற அரபு வார்த்தையை தமிழ்படுத்தினால் ‘கட்டுப்பட்டவர்’ என்று பொருள் வரும்.

இந்தக் கொள்கையாளர்கள் தங்கள் வணக்கங்களிலும், தங்கள் இறை நினைவுகளிலும், அந்தக் கொள்கையைப் பற்றிப் பேசும் போதும் அந்தக் கொள்கையின் அரபு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையில் ‘அல்லாஹ்’ என்ற பதம் வருவதால் அல்லாஹ் என்ற அந்தக் குறியீடு தனிக் கடவுளை குறிக்கும் ஒரு சொல் என்றும், முஸ்லிம்கள் தனிக் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் பிறர் விளங்கிக் கொள்கின்றனர்.

பல்வேறு மொழிகள் வழக்கிலுள்ள ஒரு நாட்டில் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு மொழியின் வார்த்தை ஒரு சாரார் பயன்படுத்தப்படும் போது அது வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தவே செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.

கிறிஸ்த்தவர்கள் வணங்கும் இயேசுவைப் பொருத்தவரை மொழிக்கு ஏற்றார்போல அந்த வார்த்தை மாற்றப்பட்டு புழக்கத்திற்கு வந்து விட்டது. ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்றும், அரபுவில் ஈஸா என்றும், தமிழில் இயேசு என்றும் இடத்திற்கு தகுந்தார்போல அவரது பெயர் மாற்றப்பட்டு விட்டதால் கிறிஸ்த்தவர்கள் இயேசுவென்று தமிழில் குறிப்பிடும் போது பிறர் அதை பளிச்சென்று புரிந்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை அவ்வாறு எல்லா சந்தர்பங்களிலும் அல்லாஹ் என்பதை மொழியாக்கம் செய்வதில்லை. (இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன) அல்லாஹ் என்றே குறிப்பிடுவதால் அல்லாஹ் என்பது ஒரு இணத்தின், ஒரு கொள்கையின் கடவுளை குறிக்கும் சொல் என்ற நிலையைப் பெற்று விட்டது.

இது வருந்தத்தக்க ஒன்றுதான், ஏனெனில் ஒரு மொழியில் பலவீனம் அல்லது மொழி இடைவெளிகளின் காரணத்தால் மிகப் பெரிய ஒரு பொதுக் கொள்கை தவறாக புரியப்படுவது வருந்தத்தக்கதுதான். இந்த தவறான புரிதல் அக்கறையுள்ள முஸ்லிம்களின் மீது கூடுதலான விளக்கும் சுமையை? ஏற்படுத்தியுள்ளது.

மிகப் பெரியக் கொள்கை’ அலட்சியப்படுத்தாமல் பரிசீலியுங்கள்.

‘அல்லாஹ்’ என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் ‘இலாஹ்’ என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது வேர் சொல்லாகும். இதற்கு ‘வணங்கப்படும் கடவுள்’ என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும்.

இந்த வரலாற்றை விளங்கிய யாரும் அல்லாஹ் என்பது இஸ்லாமிய கடவுளுக்குரிய ஆடையாளமல்ல என்பதை புரிந்துக் கொள்வர். ஏனெனில் இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.

பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது.

பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா.. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர். (அல் குர்ஆன் 38:5)”

இதுதான் உண்மையே தவிர பிறர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இஸ்லாம் புதிதாக அல்லாஹ் என்று ஒரு இறைவனை உருவாக்கிக் கொடுக்கவில்லை.

புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணம் கூறலாம். ஒருவேளை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் அரபு தேசத்தில் இல்லாமல் தமிழகத்தில் – தமிழ் மொழியில் வெளிப்பட்டிருந்தால் இங்கு நிலவி வந்த பல இறைக் கொள்கையை சீர் திருத்தி ஒரே இறைவன் என்ற அந்த மாபெரும் சக்தியை புரிய வைத்து அதன் பக்கம் மக்களை மீட்டெடுத்திருப்பார். அப்போது அவரது கொள்கை அரபுவில் மொழி பெயர்க்கப்பட்டால் தமிழில் முஹம்மத் அவர்கள் யாரை இறைவன் என்று குறிப்பிட்டார்களோ அது அரபுவில் அல்லாஹ் என்று மொழி பெயர்க்கப்படும். இதிலிருந்து அல்லாஹ் என்பது தனிக் கடவுளை குறிக்கும் சொல் அல்ல மாறாக பொதுக் கடவுளை குறிக்கும் சொல் என்பதை விளங்கலாம்.

தமிழில் பிரம்மன், விஷ்னு, முருகன் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும், இறைவன், கடவுள் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் விளங்கலாம். முந்தைய சொற்கள் தனிப்பட்டதையும் பிந்தைய சொற்களான இறைவன், கடவுள் என்பது பொது சக்தியையும் குறிப்பதாக எப்படி விளங்கிக் கொள்கின்றோமோ அதைப் போன்று தான் அல்லாஹ் என்பதும் எல்லோருக்கும் பொதுவான அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு போது இறைவனைக் குறிக்கும் ஒரு அரபு சொல்லாகும். அதனால் தான் பொதுக்கடவுளை ஏற்றுக் கொண்ட அரபு மொழி பேசக் கூடிய யூதர்கள், கிறிஸ்த்தவர்கள் கூட இறைவனை அல்லாஹ் என்றே குறிப்பிடுகிறார்கள்.

இஸ்லாம் எந்த ஒரு தனிக் கடவுள் கொள்கையையும் வகுக்கவில்லை மாறாக அது எடுத்தக் காட்டுவது பொதுக் கடவுள் கொள்கைதான் என்பதை சந்தேகமற விளங்க வேண்டும். பின்னர் சற்று அது கூறும் அந்தக் கொள்கையின் உள்ளே நுழையுங்கள்.

பகுத்தறிவே உலக புரட்சியின், வளர்ச்சியின் அடையாளம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. படிப்பும், சிந்தனையும், அனுபவமும் பகுத்தறிவை தூய்மைப்படுத்தி மனிதனை விசாலமாக்குகின்றது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தனது பகுத்தறிவை முழு வீச்சில் பயன்படுத்தும் மனிதன் தனது கடவுள் கொள்கைக்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் நம்பிக்கை என்ற பெயரில் பகுத்தறிவிலிருந்து விலகி நிற்பது விந்தையாக இருக்கின்றது.

சக்தியும் – வடிவமும்

பொதுவாக சக்தி அல்லது ஆற்றல் போன்றவற்றை வடிவப்படுத்தி மனிதன் அனுபவிப்பதில்லை. காற்று என்பது ஒரு ஆற்றல். அதை அனுபவிக்க காற்றுக்கு உருவம் வேண்டும் என்று எந்த மனிதனும் முடிவு செய்வதில்லை. ஒளி என்பது ஒரு சக்தி. ஒளிக்கு உருவம் வடிவம் கொடுத்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும் அனுபவிக்க முடியும் என்று எந்த அறிவும் நம்பிக்கையும் கூறுவதில்லை. வெப்பம் என்பது கூட ஒரு சக்தி. அதை உருவப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்று எந்த மனிதனும் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்ற சக்தி அனுபவிக்க மனிதன் விரும்பியவாறெல்லாம் உருவப்படுத்திக் கொள்கிறான். பிற இறைக் கொள்கையில் உள்ள பலவீனங்களில் ஒன்று கடவுளை உருவப்படுத்துவது. (இறைவன் உருவமற்ற வெறும் சூனியம் அல்ல. இறைவன் அவனுக்கே உரிய உருவ அமைப்போடு இருக்கிறான். அவனது உருவத்தை யாரும் இதுவரை கண்டதில்லை என்பதால் இந்தப் பரம்பொருளை உருவப்படுத்தக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது)

மனித கற்பனை, கடவுளை கொச்சைப்படுத்தலாமா..?

ஆன்றோர்கள் முதல் சான்றோர்கள் வரை எவருமே கடவுளை கண்களால் கண்டதில்லை என்பதால் தான் கடவுளாக கருதப்படும் வடிவங்கள் பெருத்த அவலங்களைப் பெற்றுள்ளன. கடவுளாக கருதப்படும் சிலைகளை பற்றி சிந்திக்கும் எந்த அறிவும் இது கடவுளை கொச்சைப்படுத்தும் போக்கு என்பதை விளங்கும்.

மனிதன் அவனுக்குத் தேவையானவற்றை மிக்க அழகுடன் வடிவமைக்கவே விரும்புகிறான். வீடு கட்ட விரும்பும் எந்த மனிதனும் கற்களை அடுக்கி கட்டி விட்டால் போதும் வீடாகி விடும் என்று முடிவு செய்வதில்லை. பொறியியளாளர்களின் ஆலோசனைப்படி வீட்டை அழகுற அமைக்கிறான். ஒரு ஓவியன் தனது ஓவியத்தை அசிங்கமாகவும் அவலட்ஷனமாகவும் வரைய விரும்புவதில்லை. புகைப்படக்காரர்கள் பார்த்தவுடன் முகம் சுலிக்கும் விதத்தில் அகோரமான புகைப்படங்கள் எடுப்பதில்லை. அவனது தேவைகளுக்காக அழகுணர்ச்சியை நாடும் மனிதன் கடவுளை கற்பனை செய்யும் போது மட்டும் எவ்வளவு கேவலமாக அதை வடிவமைத்துக் கொள்கிறான் என்பதை பார்க்கும் போது சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கரங்கள், மிருகங்களுக்குள்ள கோறப்பற்கள், யானைத்தலையும் பெருத்த தொப்பையும் கொண்ட உருவம். கருத்த, தடித்த நிறத்தில் பயங்கர உருவங்கள் என்று எத்துனை வித அகோரங்கள்!.

தனது குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கைகளுடன் குழந்தை பிறந்தால் கடவுளின் வடிவம் என்று அதை ஆபரேஷன் செய்யாமல் விட்டு விடுவார்களா..? கோரப் பற்களுடன் குழந்தைப் பிறந்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவார்களா..? இறைவனாக கருதப்படும் உருவங்களுக்கு ஏன் இந்த அவலங்கள்!

மேல் தட்டு மக்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒரு சாரார் வழிபடும் சிலைகளிடம் இத்தகைய அகோரங்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். தாழ்ந்த மக்களாக அவர்கள் கருதுபவர்களின் சிலைகளின் வடிவங்கள் கூட தாழ்ந்தவைகளாகவே இருக்க வேண்டும் என்ற ஜாதிய வெறிப்பாடே இவற்றிற்கு காரணம்.

இறைவன்(அல்லாஹ்)வாகிய அவனுக்கு இந்த அவலட்சனங்கள் இல்லை.

தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலையா..?

கல்லை கடவுளாக உருவப்படுத்திக் கொள்பவர்கள் அதை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதைப் பார்க்கிறோம். சாதாரண நடைமுறைக்கு கூட சாத்தியமில்லாத தத்துவத்தை மகாப் பெரிய பொதுக் கடவுள் கொள்கைக்கு பொருத்திப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அறிவாளிகளால் இதை எப்படி சரிகாணமுடியும் என்பதும் விளங்கவில்லை.

இந்தத் தத்துவத்தை சரிகாண்பவர்களின் வீட்டை ஒருவன் பார்த்து ‘இது உன் வீடென்றால் உன் வீடு, என் வீடென்றால் என் வீடு’ என்று கூறினால் மிக அழகான தத்துவம் அதனால் நீ விரும்பினால் இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடு’ என்று சொல்வார்களா..? சிலைகள் என்றைக்கும் சிலைகளாகத்தான் இருக்கும் அவை ஒரு போதும் தன் நிலையிலிருந்து உயர்வுப் பெறாது. வேண்டுமானால் நாளடைவில் அது தனது புதிய பொலிவை இழக்கலாம் அதைத்தவிர வேறெந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஊனமான பல சிலைகள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடப்பதைக் கூட பார்க்க முடியும். வித விதமாக பல சிலைகளை வடிவமைத்து தூக்கி ஆடிபாடி கடலில் கரைத்து விட்டு கடவுளை கண்ணியப்படுத்தி விட்டதாக மகிழ்கிறார்கள். உண்மையான இறைவனை இப்படியெல்லாம் செய்ய முடியுமா…? அல்லாஹ் என்ற அந்த இறைக் கொள்கை இவற்றிர்க்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.

சிந்தனையின் அடுத்தக்கட்டத்திற்கு நகருங்கள்.

ஏன் பல இறைவர்கள் வேண்டும்?எதற்காக, எந்த அடிப்படையில் இந்த மக்கள் பலக் கடவுள்களை நாடுகிறார்கள் அதற்கு என்ன அவசியம் என்பதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.

உயர்ந்த மனிதன்! தாழ்ந்தக் கடவுள்!!

திறமைமிக்க எந்த ஒரு மனிதனும் தன் திறமை தனித்துவத்துடன் வெளிப்படுவதையே விரும்புவான். தனது திறமையையும், உழைப்பையும், உலகம் மிகச் சரியாக கண்டுணர வேண்டுமானால் தாம் தனித்துவத்துடன் வெளிப்படவேண்டும் என்றே ஆசைப்படுவான். அப்படி வெளிப்பட்டவர்கள் தான் உலகில் மிளிர்கிறார்கள்.மிகச் சிறந்த, திறமைவாய்ந்த ஒரு கட்டிடப் பொறியாளர் தன்னுடைய திறமையால் ஒரு கட்டிடம் உயர்வதையே விரும்புவார். கூட்டு வைத்துக் கொண்டு தனது திட்டத்தை உருவாக்க மாட்டார். புகழ் மிக்க ஓவியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் யாராவது கூட்டாக ஓவியம் வரைந்து அந்தப் புகழை அடைந்தார்களா..? இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கூறலாம். பலவீனங்கள் அடங்கிய மனிதனே ஒற்றையில், ஒற்றைப்பாட்டில் இத்துனை உயர்வுப் பெறும் போது பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் மட்டும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டு இருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனைக் கற்பனை செய்பவர்கள் மனிதனின் ஆற்றலை விட கடவுளின் ஆற்றல் குறைந்தது என்று எண்ணுகிறார்களா..?

சீர்மை சிதையும் என்பது உறுதி. 

முழு உலகையும் நீங்கள் உங்கள் சிந்தனை திரையில் கொண்டு வந்து விரியுங்கள். எந்த நாட்டிலாவது சம அதிகாரம் பெற்ற இரண்டு ஜனாதிபதிகள், இரு பிரதமர்கள் இருக்கிறார்களா…! அரசுத் துறைகள் எதுவொன்றிலும் சம அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்டு பணியாற்றுகிறார்களா…? ஒன்றுக்கு மேற்பட்ட இறைவர்கள் இருந்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள். இந்தக் கேள்விகளையும் தங்களுக்குத் தாங்களே சற்றுக் கேட்டுப் பார்க்கட்டும். ஒரு நாட்டிற்கு இரு பிரதமர்கள், இரு ஜனாதிபதிகள் இருந்தால் என்னத் தவறு?பள்ளிக் கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு இரு தலைமை ஆசிரியர்கள் இருந்தால் என்னத் தவறு? ஒரு வீட்டுக்கு இரு குடும்பத்தலைவர்கள் இருந்தால் என்னத்தவறு? இங்கெல்லாம் இருமை இருந்தால் என்னத் தவறு ஏற்படுமோ அதை விட பயங்கரம் இருக் கடவுள்கள் இருந்தால் ஏற்படும். இதை இறை வேதமாகிய குர்ஆன் இப்படிக் கூறுகிறது.வானங்கள், பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டுக் கடவுள்கள் இருந்திருந்தால் அவை சீர்கெட்டு சின்னாபின்னமாகி இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை. எதுவொன்றும் ஒரே சீராக இயங்கவேண்டுமானால் அது ஒரு அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டும். நாடும் வீடும் சிறக்க ஒருமையே சரியானத் தீர்வு எனும் போது மொத்த உலகிற்கும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டக் கடவுளைக் கற்பனைச் செய்கிறீர்கள்?

பலவீனங்களே கூட்டாச்சியைப் பற்றி சிந்திக்கும்.

ஒரு பெரியக் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை என்றால் தங்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்து அந்தக் காரியத்தை சாதிப்பார்கள். இன்றைக்கு நடக்கும் கூட்டாச்சிகளை இதற்கு உதாரணம் கூறலாம். ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை தங்களுக்கு இருந்தாலும் அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்பதால் பிறரை நாடி கூட்டணி வைத்துக் கொண்டு நாடியதை சாதிக்கிறார்கள். (இந்தக் கூட்டணிகளில் பிரச்சனை உருவாகி முட்டி மோதிக் கொள்வது தனி விஷயம்)இப்போது சிந்தியுங்கள். இறைவர்களும் கூட்டாச்சி நடத்த வேண்டுமென்றால் இறைவர்களிடமும் மனித பலவீனங்கள் இருக்கின்றனவா..? இப்படி சிந்திப்பது கடவுளை பலவீனப்படுத்துவதாகாதா…? பலவீனத்திற்குட்பட்டவ(ர்)ன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? பல கடவுள் சித்தாந்தக்காரர்கள் நிதானமாக இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையான அந்தப் பரமசக்தி (அல்லாஹ்)க்கு எத்தகைய கூட்டு இறைவர்களும் தேவையில்லை. ஏனெனில் அவன் அனைத்து பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவன்.

பல கடவுள்கள் – பல மனிதர்கள்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் கலந்து ஒரு மனிதன் உருவாகின்றான். அந்த உருவாக்கம், கருவரையின் குடியிருப்பு, பிறக்கும் முறைகள், பால்யப் பருவம் என்று உலகில் பிறக்கும் கோடானக் கோடி குழந்தைகளும் ஒரே விதத்தில் பிறக்கும் போது பின்னர் ஜாதியம் என்ற கொடிய நோய் அந்தக் குழந்தையோடு வந்து ஒட்டிக் கொள்கின்றது. மிக சொர்ப்பமானவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள், அதிகமானவர்கள் தாழ்ந்தவர்களாகின்றார்கள். மனிதத்துவம் சிதைந்து ஏற்றத்தாழ்வு உருவாகி நிலைப் பெற்று விட்டது. இதற்கு என்னக் காரணம்? பலக் கடவுள் கொள்கையே இந்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி பலக் கடவுள் கொள்கையை கைக் கழுவுவதேயாகும்.

விண்ணுலகம், மண்ணுலகம் என்று அனைத்துலகத்திற்கும் ஒரே இறைவன் என்ற நிலை வரும் போதுதான் அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சம அந்ததஸ்த்துள்ளவர்களாவார்கள். அதை மிக வலுவாக உலகில் நிலை நிறுத்திக் காட்டியது இஸ்லாம் ஒன்றுதான்.

மனித சகோதரர்களே.. கூண்டுகளிலும், முட்களிலும் சிறைப்பட்டு கிடக்கும் உங்கள் சிந்தனைச் சிறகுகளை அவற்றிலிருந்து விடுவித்து சற்று அகலமாக விரித்து பறக்க முயலுங்கள். அகன்ற வானவீதி அனைத்தையும் ஆளும் அந்த மகா இறைச் சக்தி உங்களுக்குப் புலப்படும். கடுகளவுக் கூட பலவீனமில்லாத அந்த மகா இறைச் சக்தியே உண்மையான இறைசக்தி.

அந்த இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவனல்ல. அவனே அனைத்துலகுக்கும் சொந்தமானவன். அந்த மகா சக்தியை அரபுமொழியில் ‘அல்லாஹ்’ என்று குறிப்பிடுகிறோம். இறைவன் என்று குறிப்பிடுங்கள், கடவுள் என்று குறிப்பிடுங்கள் அதில் எந்தத் தடையும் இல்லை. மனிதக் குலம் விடுதலைப் பெற வேண்டுமானால் அந்த ஓரிறைக் கொள்கைக் குறித்து சிந்திப்பது ஒன்றே சரியான வழியாகும். இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் பக்கம் உங்களை அழைக்கின்றோம். 

ஆக்கம்: ஜி.நிஜாமுத்தீன் – பரங்கிப்பேட்டை

நன்றி: இதுதான் இஸ்லாம்.காம்

_________________
வாசகராய் வருக

வாசகர் வட்டத்தில் இணைக

Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

உண்மையான இறைவன்

கேள்வி: நான் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸுலுஹூ என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா? mkannan@coolgoose.com

பதில்கள்: இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில பொழுதுகளில் சில காரியங்கள் நெருக்கடியாக தெரிந்தாலும் அதற்காக நாம் மனம் சஞ்சலப்பட்டாலும் இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைப்பெற்றிருந்தால் அதற்கும் இறைவன் புறத்திலிருந்து கூலி கிடைத்து விடும் என்பதை இஸ்லாம் தெளிவாகவே சொல்லியுள்ளது.

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள நிலையல்ல. இஸ்லாத்துடைய ஆரம்ப கால வரலாற்றை எடுத்து பார்த்தால் அன்றைய இறை நம்பிக்கையாளர்கள் கடின நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக இருந்த உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை மக்காவில் மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றவர்களில் பெரும்பாலோர் உமர் போன்றவர்களுக்கு பயந்து தங்கள் இறை நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தனர். இதற்கு இறைத்தூதர் அனுமதியும் அளித்தார்கள். உமர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தான் அங்கு அனைவரின் இறை நம்பிக்கையும் பகிரங்க அறிவிப்பாகின.

சில நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இறை நம்பிக்கையில் – இஸ்லாத்தில் – அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள நிலையில் அதை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவே செய்கிறது. கீழுள்ள இறை வசனம் அதை தெளிவாக அறிவிக்கிறது பாருங்கள்.

எவர் (ஈமான்) இஸ்லாமிய நம்பிக்கைக் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு (அல் குர்ஆன் 16:106)

‘நான் இறை நம்பிக்கையாளன் தான்” என்று உள்ளத்தில் இஸ்லாம் இல்லாத நிலையில் யார் கிண்டலாக இறை நம்பிக்கையை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இந்த வசனம் முன் வைக்கும் அதே வேளை, இக்கட்டான சூழ்நிலைக்காக தனது இஸ்லாமிய நம்பிக்கையை தற்ாகலிகமாக மறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் பாவமான காரியமல்ல. என்பதையும் இறைவன் தெளிவுப்படுத்தியுள்ளான். இந்த வசனத்தில் இடம் பெறும் “.எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை)” என்ற வாசகம் உங்கள் மன அமைதிக்குரியது.
ஆனாலும் இஸ்லாம் ஒரு வாசனை மலருக்கு ஒப்பானது. அது உங்கள் வழியாக தனது வாசனையை வெளிப்படுத்தித் தான் தீரும். இறைவன் உங்களுக்கு அருள் புரிந்துள்ளான். உங்கள் வழியாக எத்துனைப் பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அவன் தான் அறிவான்.

மிகவும் அமைதியாக சூழ்நிலையை அணுகுங்கள். எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற அவசர பேர்வழிகளிடம் முதலில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக சிந்திக்கக் கூடியவர்களிடம் வெளிபடுத்துங்கள். எந்த சந்தர்பத்திலும் நிதானம் இழந்து விடாதீர்கள்.

ஒருவேளை கடைசிவரை உங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வெளிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கும், முயற்சிக்கும் தகுந்த பலன் கிடைத்து விடும்.

இறைவனின் உவப்பிற்குரியவர்களே நேர்வழிப் பெறுவார்கள். அந்த வகையில் நீங்கள் பாக்கியம் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக நாங்களும் இறைவனைப் புகழ்கிறோம். அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். எப்போதும் அவனுடன் தொடர்புடன் இருங்கள்.

நன்றி: இதுதான் இஸ்லாம்.காம்

Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

போலி வேத புத்தகங்கள்

இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழிகெடுத்து விடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட) வேண்டாம்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

இன்று இஸ்லாமியர்கள் மத்தியிலே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள புத்தகங்களில் அதிகமானவை இஸ்லாம் என்ற அடைமொழி பயன்படுத்தப்பட்டு இஸ்லாமிய விரோதப் புத்தகங்களாகத்தான் இருக்கின்றன.

சல்மான் ருஷ்தியும் தஸ்லீமா நஸ்ரீனும் மட்டுமல்ல இன்று முஸ்லிம்களில் பெரும்பாலோரால் பெருமதிப்பு மிக்கதாக மதிக்கப்படும் எத்தனையோ புத்தகங்கள் இஸ்லாத்தில் சேறு பூசுவதற்காகவே புறப்பட்டவைதான்.

ரவ்ளா ஷரீபில் கனவில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஸலவாத்து, நெருப்பு ஸலவாத்து(ஸலாத்து நாரியா), பெரியார்களின் சம்வங்கள் மூலம் பெரியார் பூசைக்கான புத்தகங்கள். இப்படி இன்னோரன்ன கதைகள். இவர்களெல்லாம் தனக்குத் தாமே வேறு ‘மௌலானாக்கள்’ என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். விலை போவதற்கு அவைதான் ஷரத்துக்கள்!

மன்ஸில் என்ற பெயர்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் புத்தகங்கள்.

அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக மனிதனின் மார்க்கமாகப் பொருந்திக் கொண்ட இஸ்லாத்தின் முழுமுதல் வேதப் புத்தகத்திற்கு ‘அல்-குர்ஆன்’ என்ற பெயரை அழகாகக் சூட்டியிருக்கிறான். இவர்கள் அந்தப் பெயருக்குச் சவாலாக ‘மன்ஸில்’ என்று சூட்டியிருக்கிறார்கள். இந்த வழிகேடர்கள் தானும் கெட்டு அப்பாவி பாமர மக்களையும் வழிகேட்டிலாக்கிறார்கள். இதற்காகத்தான் இவர்கள் ஏழாண்டுகள் அரபி மத்ரஸாக்களில் கல்வி கற்றார்களா?

அல்-குர்ஆனின் சில அத்தியாயங்களை அச்சிட்டு அதற்கு முன்னும் பின்னும் ஓதுவதற்கென்று குர்ஆனல்லாத சிலதையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். அல்-குர்ஆனை விட இதைத்ததான் இன்றைய முஸ்லிம்களில் பலர் வைத்துக் கொண்டு பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு விளக்கம் கேட்டால் இதை ஊக்குவிப்பவர்கள் சொல்லும் காரணம் குர்ஆனை வுளு இல்லாமல் தொடக்கூடாது, ஆகவே, குர்ஆன் வசனங்களைவிட அதிகமாக ஸலவாத்துக்கள், துஆக்கள் என்று வேறு சிலவற்றை அச்சிட்டு வுளு இல்லாமல் தொடுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது என்று காரணம் சொல்கிறார்கள்.

அறியாமைக்கும் ஓர் அளவுண்டு! மனிதன் தேவையில்லாமல் போட்டுக் கொண்ட சட்டம் எப்படி வாழ்க்கைக்கு ஒத்துப் போகாமல் இருக்கிறது என்பதையாவது சிந்திக்க வேண்டாமா? அந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்வின் வழிகாட்டலைப் பார்க்க வேண்டாமா?

அல்லாஹ்வின் அறிவுக்கே சவால் விடும் இந்த ஏழுவருட வகுப்புகளுக்குச் சென்று வந்த அறிஞர்கள் அல்-குர்ஆனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களுக்கு பாத்திஹா ஓதி சம்பாதிப்பதற்காகவா இந்தக் குர்ஆன் அருளப்பட்டது? மரண வீடுகளில் ஓதி இறந்தோருக்குச் சாட்டுவதற்காகவா இந்தக் குர்ஆன் மனித இனத்திற்கு வழங்கப்பட்டது? அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் போது மன்ஸில் என்றொன்றைத் தொடங்கி ‘சொற்பக் கிரயத்திற்கு’ விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது மேலெடுத்துக் காட்டப்பட்ட ஹதீஸ் இந்தக் காலத்திற்கு எவ்வளவு பொருத்தமாகவுள்ளது என்பதை சிந்திப்பவர்கள் உணரக்கூடியதாயிருக்கும்.

இப்படிப்பட்ட திருகுதாளங்கள் செய்து மக்களை வழிகெடுப்பதிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. அப்படிப்பட்ட பித்ஆக்களுக்கு வழிகாட்டுவதிலிருந்தும் அவற்றைச் செய்வதிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொண்டோமானால் அதுவே சுட்டெரிக்கும் கடும் வெய்யிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இன்ஷா அல்லாஹ் ஒரு காரணியாகவிருக்கும்.

வஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

இணையத்தள வாசகர்களே… தமிழகத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் மிகத் தீவிரமாக முடுக்கி விடப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையிலும் இதுவரை முறையாக கவனம் செலுத்தப்படாத ஒரு துறையாக பொருளாதார துறை உள்ளது. தொப்பிப் பற்றியும், விரலசைப்பதுப் பற்றியும், தராவீஹ் என்ற இரவுத் தொழுகைப் பற்றியும் பேசி எழுதி விவாதித்ததில் ஒரு பங்கு கூட வாழ்வின் மிக முக்கியத்  தேவையான பொருளாதார வழிகாட்டலுக்கு நாம் ஒதுக்கவில்லை. களத்தில் நிற்கக் கூடிய இஸ்லாமிய அறிஞர்கள் பொருளாதார வழிகாட்டல் குறித்து ஏன் சிந்திக்கவேயில்லை, சிந்திப்பதேயில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

பொருளாதார வழிகாட்டல் வாழ்விற்கான தலையான அம்சமாகும். தொப்பி போன்ற அற்ப விஷயங்களுக்காக சிதையும் இளைஞர்களின் கவனம், சமீபத்தில் அனல் பறக்க மோதிக்கொள்ளும் அரசியல் மற்றும் இயக்க போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களின் கவனம் பொருளாதார வழிகாட்டல், கட்டமைப்பு, சீர்திருத்தத்தின் பக்கம் திரும்ப வேண்டும். இஸ்லாமிய அறிஞர்களும் சமூக ஆர்வளர்களும் இதற்கு துணை நிற்க வேண்டும்.

உலகெங்கும் வங்கிகள் வியாபித்துள்ள நிலையில் வங்கி முதலீடு அதிலிருந்து வரும் வருவாய் போன்றவற்றில் அகில உலக முஸ்லிம்களுக்கும் சந்தேகங்கள் நீடித்தவண்ணமுள்ளன. வெளிநாடுகளில் இது பற்றிய ஆய்வுகளும், விளக்கங்களும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்கு.. இந்தக்கட்டுரையின் கருத்துக்களை இஸ்லாமிய (இறுதி) தீர்வாக நாம் வைக்கவில்லை.  பலகோணங்களில் படித்து கேட்டு விளங்கி ஆய்வு செய்ததையே முதல் முறையாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். முறையான விளக்கங்களும் ஆதாரங்களும் கிடைக்கும் போது இந்த கட்டுரையின் கருத்துக்களில் மாற்றங்கள் வரலாம்.

இதுபற்றிய ஒரு விரிவான ஆய்வுகளத்தில் உங்களையும் கலந்துக் கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஆதவான, எதிர்மறையான, சந்தேகமான அனைத்துக் கருத்துக்களையும் தயக்கமின்றி, அலட்சியமின்றி எழுதுங்கள்.

குர்ஆன் சுன்னா வழிகாட்டும் அந்த பொருளாதார அமைப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.


அ) வட்டி என்றால் என்ன..?
ஆ) நம் விருப்பத்துடன் வட்டி நம் பொருளாதாரத்துடன் இணைய வேண்டுமானால் அதற்குிய நிபந்தனைகள் என்னென்ன..?
இ) இன்றைக்கு உலகம் எதை வட்டி என்று சொல்கிறதோ இதைத்தான் இஸ்லாமும் வட்டி என்று சொல்கிறதா.. அல்லது இஸ்லாம் வட்டி என்று சொல்வது இன்னும் அழுத்தம் வாய்ந்தவையா..?

இவற்றிற்கான பதிலை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

முதலில் குர் ஆன் வட்டி என்று எதை குறிப்பிடுகிறது என்பதை விளங்குவோம்.

வட்டியின் வகைகள்.

ஒரு முறை லாபம் கிடைக்கும் வகை.

வியாபாரம் வட்டியைப் போன்றதே… என்ற வாதத்தை முன் வைத்து அன்றைக்கு பலர் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் இதை மறுத்து ‘அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துவிட்டான்’ என்கிறான். 2:275

வட்டியும் வியாபாரமும் ஒன்று என்று கூறியவர்கள் ‘இரண்டிலிருந்தும் லாபம் கிடைப்பதயே கருத்தில் கொண்டிருந்தார்கள்’ இறைவன் இதை மறுக்கிறான். என்னக் காரணம்? வியாபரம் என்பது பணம் பொருளாக மாறும் அடிப்படையையும் – இயல்பையும் கொண்டதாகும். வட்டி என்பது பணம் பணமாகவே மாறும் இயல்பைக் கொண்டதாகும்.

பணம் பொருளாக மாறும் போது அது உற்பத்தி பெருக்கத்தையும் தொழில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதார தேவைகள் பூர்த்தியாகும். பணம் பணமாக மாறும் போது இதில் எதுவுமே சாத்தியமில்லை என்பது மட்டுமல்லாமல் பணம் முடங்கி கிடக்கும் சூழ் நிலையையும் உருவாக்கி விடுகிறது.

பொதுவாக செல்வம் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதையோ அது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருப்பதையோ இஸ்லாம் விரும்பவில்லை.

உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது. (அல் குர் ஆன் 59:7)

பணம் பொருளாக மாறாமல் பணமாக மாறும்போது அவை பணம் படைத்தவர்களிடமே பதுங்கி கிடப்பதை இயல்பாக கொண்டுவிடும். பான்மல் வகைறாக்கள் இதற்கு உதாரணம்.

தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கு ஓரளவாவது பணம் தேவைப்படும். வட்டிக்கு இந்த முதலீடுகள் தேவையில்லை. 100 ரூபாயை வைத்து வியாபாரம் செய்ய முடியாத ஒருவனால் 100 ரூபாயை வட்டிக்கு விட்டு 105 ரூபாய் சம்பாதித்துவிட முடியும். இந்த வகையில் சில்லரையாகவும் பெருமளவு பணம் முடக்கப்படுவதால் பண வீக்கம் அதிகமாகி எத்துனையோ கெடுதிகள் முளைத்து நிற்கின்றன.

பணம் கொடுத்து கூடுதல் பணம் பெருவதே இங்கு வட்டியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை விளங்கலாம்.

வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்று ஒரு தொகையை கொடுத்து விட்டு அதை திரும்ப பெறும்போது கூடுதலாக ஒருமுறை வட்டிப் பெறும் முறை ‘வட்டி முறைகளில்’ ஒன்றாக இருந்தது. அது இந்த வசனத்தின் வழியாக இறைவன் தடுத்துவிட்டான்.

தொடர் வட்டி.

இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).

இவை் ‘தொடர் வட்டி’க்கு எதிராக இறங்கியதாகும்.

‘பல மடங்காக பெருகும் நிலையில்’ என்பது. சேமிப்பு – முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை குறிப்பதாகும். தொடர் லாபம் என்பது வட்டிக்கு மட்டுமே உிய வஞ்சனைத்தன்மையாகும்.

ஒரு பொருளுக்கு விற்பனையின் போது ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்றத் தன்மை கொடும் வட்டியான தொடர் வட்டிக்கு இல்லை.

தொடர் வட்டியின் மூலதனம் ஒரு நாடு அல்லது அந்த நாட்டு மக்களின் இயலாமையும் பலவீனமுமே காரணமாக அமைந்து விடுகின்றன.

நான் உனக்கு ரூ1000 கொடுப்பேன் அதை திருப்பி அடைக்கும் வரை மாதாமாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை ஈட்டித்தரும் வட்டியாகும். இந்த வட்டி முறை உலகலாவிய வலையைப் பின்னி பல நாடுகளை செல்லாக் காசாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த வட்டி முறை மிகப்பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்த வல்லது என்பதால் இஸ்லாம் இதற்கு எதிராக முன்னணியில் நின்று போர் பிரகடனம் செய்கிறது. இத்தகைய வட்டி முறைகளை எந்த சமாதான வார்த்தைகளாலும் நியாயப் படுத்தவே முடியாது என்பதுதான் நமது நிலைப்பாடு.

அடுத்து,

வங்கி – வங்கியில் செய்யும் முதலீடு அல்லது சேமிப்பு- அவற்றிலிருந்து கிடைக்கும் (வருமானம்) வட்டி இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள வட்டி முறையோடு ஒப்பிடுவதும் – ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று சொல்லுவதும் எந்த அளவிற்கு நியாயமானது என்பதை பார்ப்போம்.

வங்கியும் – வட்டியும்.

வங்கி என்பது சிறு தொகை முதல் பெரும் தொகை வரை மக்கள் முதலீடு செய்யும் ஒரு நிருவனமாகும். இந்த நிருவனம் தேசிய அளவில் ஒரு வலையைப் பிண்ணிக் கொண்டு தன்னுடைய பணியை துவங்குகிறது. இதன் பணி முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மேட்டுக் குடி நடுத்தர வர்கம் வறுமைக்கோடு என்று வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்களின் தேவைக்கு பணம் கொடுத்து மேலதிகமாக பணம் பெற்று முதலீட்டாளர்களையும் தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறது.

பணம் கொடுத்து கூடுதலாக பணம் பெறுவது வட்டிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனல் வங்கிகள் இந்த வேலையை மட்டும் தான் செய்கின்றனவா… என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விவசாயம் – தொழில் – வீட்டுவசதி போன்றத் தேவைகளுக்காக மட்டும் ஒரு வங்கி இயங்கினால் அந்த வங்கியில் கையிருப்பு என்பது மிக குறைந்த அளவைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.

உதாரணமாக,
அன்னிய செலவாணி அறவே இல்லாத – உள் நாட்டு அளவில் மட்டுமே இயங்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொல்வோம். இதில் அன்னிய செலவாணி இல்லாததால் வட்டி சதவிகிதம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் குறைவாகவே இருப்பார்கள். இந்த வங்கி முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டையும் கடனாக கொடுக்கும் பட்சத்தில் வரும் வட்டி மட்டுமே கையிருப்பாக வைக்கும் சூழல் அந்த வங்கிக்கு உருவாகி வங்கி பெரும் பிண்ணடைவை அடைந்துவிடும். அதனால் கடனுதவி என்பதோடு மட்டும் நின்று விடாமல் நல்ல லாபம் ஈட்டும் நிலையில் உள்ள தொழில் மற்றும் வியாபாரத்திலும் வங்கிகள் முதலீடு செய்து வருவாயை பெருக்கிக் கொள்ளவே செய்யும்.

அன்னிய செலவானியைப் பெற்றிருக்கும் வங்கிகளும் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் தொகையை முடக்கி லாபம் பெறவே செய்யும்.
வெறும் கடனுக்கு வட்டி என்ற நிலை மட்டும் வங்கிகளில் இருந்தால் அதன் கையிருப்பு குறையும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்

ஒரு வங்கி விவசாயம் – தொழில் – வீட்டு வசதி போன்றவற்றிற்கு மட்டும் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் இப்போது கடனுக்காக அது ஒதுக்கும் தொகையின் அளவு என்ன..?

விவசாயத்திற்கென்று விவசாயிகள் அய்ம்பது லட்சம் பேர் (இவை மிக குறைந்த அளவே) வங்கியிலிருந்து நபர் ஒருவர் தலா ஒரு லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி அதற்காக ஒதுக்க வேண்டிய தொகை மொத்தம் அய்னூரு ஆயிரம் கோடிகளாகும்.

தொழில் – வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றை கணக்கிடும் போது இவை இன்னும் பல மடங்காக உயரும். கடனுக்கு உத்திரவாதமாக வங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் ஒழுங்காக வட்டிக் கட்டப்படாமல் – திருப்பி அடைக்க வழியில்லாமல் போய் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் பல ஆயிரம் கோடிகளை தொடும். (தேவைப்பட்டால் இதுபற்றி மேலும் விளக்கலாம்)

இந் நிலையில் பணம் கொடுத்து பணம் பெருவது என்ற அந்த ஒன்றை மட்டுமே வங்கி மூல்தனமாகக் கொண்டிருந்தால் அதன் கையிருப்பு மற்றும் வருவாயில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். இதை சரிகட்டுவதற்காக வங்கிகள் பெரும் – பெரும் தொழில் நிருவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன. பங்க சந்தை, பத்திரங்கள், உட்பட பணம் பண்ணும் வழிகளை வங்கிகள் தெளிவாகவே கண்டு வைத்துள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் பல நிலைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து வரும் லாபங்கள்  கடனுக்கான வட்டியுடன் கலந்தே வாடிக்கையாளர்களை அடைகின்றன.

லாபமும் வட்டியும் கலந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை பேணுதல் அடிப்படையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்று கூறலாமே தவிர அவற்றை ‘ஹராம்’ என்று கூறுவது முறையல்ல என்றே கருதுகிறாம்..

‘தவிர்த்துக் கொள்ளுதல்’ என்பதின் பொருள் என்னவென்பதை இப்போது பார்ப்போம்.

இஸ்லாம் ‘தவிர்த்துக் கொள்ளுதல்’ என்பதை இரண்டு அர்த்தங்களில் முன்வைக்கிறது.
1) விலக்கப்பட்டவை என்று தெரிந்து அதை தவிர்த்துக் கொள்ளுவது.
2) ஒன்றின் மீது சந்தேகம் வரும் போது அதை தவிர்த்து விடுவது.

நம் தேவைக்காக வங்கியில் சேமிக்கப்படும் பணத்திற்கு மேலதிகமாக கிடைக்கும் தொகை ‘வட்டியோ…’ என்று சந்தேகம் வரும் போது அத்தகைய பணத்தை தன் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே ‘தவிர்த்துக் கொள்ளுதல்’ என்ற அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகின்றோம்.

வங்கிகள் எத்தகைய தொழிலிலும் பணத்தை முடக்காமல் கடன் மட்டுமே கொடுத்து வட்டிப் பெறுகிறது என்று தெளிவாக நிருபிக்கப் படாதவரை அது மேலதிகமாக கொடுக்கும் தொகையின் மீது ‘சந்தேகம்’மட்டுமே நிலைத்திருக்கும்.

‘ஹலாலும் தெளிவானது – ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்’ என்பது நபி மொழி. (புகாரி)

இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.

இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.

நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் ‘தெளிவாக’ அறிவிக்கப்பட்டன. ஹராமோ – ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் ‘இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு’ என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

அன்றைக்கு அந்த மக்களிடம் இருந்த பொருளாதார திட்டம், வழக்கம், பொருள்மாற்று வழிமுறைகள் போன்ற அனைத்தும் அடுத்து வந்த சில நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கண்டு விட்டது. இருபதாம் நூற்றாண்டில் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்த பொருளாதார பார்வை, மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தலைகீழ் மாற்றமாகி போயின.  ஊர் சந்தை வியாபாரம் என்ற நிலை உலக சந்தையானது. பொருளாதாரம் அகலமாக கண்களை விரித்து முழு உலகையும் பார்த்தது. விளைவு வங்கி உட்பட அனேக பொருளாதார நிருவனங்கள் உலகில் முளைத்து தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு வாழ்பவர்கள் புதிய பொருளாதார சிக்கல்களை சந்திக்கின்றார்கள். வைப்பதிலும், பெருவதிலும், கொடுப்பதிலும் புதிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். தான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் இந்த பொருளாதார வழிகளை எப்படி கையாள்வது என்பதில் அவர்களுக்கு சந்தேகம் வருகின்றது.

ஹலாலென்றோ ஹராமென்றோ தீர்மானித்து விட முடியாத இக்கட்டான நிலைகளில் கிடந்து மனம் தடுமாறுகின்றது. இத்தகையவர்களுக்கு ஆருதலளித்து வழிகாட்டுகிறது இந்த நபிமொழி. குறிப்பாக வங்கியில் நாம் சேமிக்கும் பணத்திற்கு மேலதிகமாக கொடுக்கப்படும் பணம் பற்றிய சந்கேத்திற்கு வழி காட்டுகிறது.

வங்கி கணக்கு நிர்பந்தமா..? என்று அடுத்துப் பார்ப்போம்

வங்கியின் வட்டியைப் (வட்டி என்று பேங்க் குறிப்பிடுவதால் நாமும் புரிவதற்காக அவ்வாறே குறிப்பிடுவோம்) பெறலாமா – கூடாதா என்பது வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளலாமா… என்பதிலிருந்து துவங்கும் பிரச்சனையாகும். எனவே வங்கி கணக்கு நிர்ப்பந்தமா… என்பது நாம் முதலில் அலச வேண்டும்.

வங்கியில் ‘ நிர்பந்தத்திற்காகவே’ கணக்கு வைத்துள்ளோம் என்று பரவலாக முஸ்லிம் சகோதரர்கள் (அடிப்படையை உணர்ந்தவர்களும்) சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அதில் நிர்பந்தம் உள்ளதா என்பதை நாம் நிதானத்தோடும் – தூர நோக்கோடும் – ஆதார அடிப்படையிலும் அலசிப் பார்க்க வேண்டும்.

நிர்பந்தம் என்றால் என்ன..?
பொதுவாக நிர்பந்தம் என்பது மனிதர்களுக்கு மனிதர் மாறுப்படவே செய்யும். சிலர் கடினமான சூழ் நிலையைக் கூட இலேசாக எடுத்துக் கொண்டு சமாளித்து விடுவார்கள். இன்னும் சிலர் சிறிய அளவிலான பிரச்சனைகளையும் நிர்பந்தம் என்று கூறி தன்னை சமாதானப் படுத்திக் கொள்வார்கள். இது மனிதர்களின் மன உறுதியைப் பொறுத்து மாறுபடும்.

ஆனால் ஒரு முஸ்லிம் ‘ நிர்பந்தத்திற்குிய அளவை’ அவனாகவே தீர்மானித்துக் கொள்ள முடியாது. நிர்பந்தம் என்றால் என்ன என்பதற்கு இஸ்லாம் வழிகாட்ட வேண்டும்.

இஸ்லாம் எதை நிர்பந்தம் என்கிறது?

1) வலிய செல்லாமலும் – வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எவ்வித குற்றமும் இல்லை. (அல் – குர் ஆன் 2:173 – 6:145 – 16:115)

2) பாவம் செய்யும் எண்ணமில்லாமல் பசியின் காரணமாக நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பான் (அல் – குர் ஆன் 5:3)
நிர்ப்பந்தம் என்ன என்பதை விளக்கும் வசனங்கள் இவை.

வரம்பு மீறக்கூடாது – வலிய செல்லக்கூடாது என்று இரண்டு கடின நிபந்தனைகளை இஸ்லாம் நிர்ப்பந்தத்திற்கு அளவுகோலாக்கியுள்ளது.
வங்கி கணக்கு நிர்பந்தம் என்று கூறுவோர் இந்த நிபந்தனைகளுக்கு ஆட்பட்டவர்கள் தான் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்க முடியுமா..?

எந்த வங்கியும் ‘எங்களிடம் கணக்கு வைத்துதான் ஆக வேண்டும்’ என்று கட்டாயப் படுத்தாத போதும் ‘வசதியான வங்கிக்கு வலிய சென்று கணக்கு வைத்துக் கொள்வதும் – வங்கி என்பது மிகப்பெரிய வட்டிக் கடை என்று மிகத் தெளிவாக தெரிந்த நிலையில் வரம்பு மீறி கணக்கு வைத்துக் கொள்வதும் நிர்பந்தம் தானா…

வலிய செல்லக் கூடாது – வலிய செல்லப் படுகிறது.
வரம்பு மீறக் கூடாது – வரம்பு மீறப் படுகிறது. ‘எதை நிர்பந்தம் என்கிறீர்கள்..?’
வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்றால் வாழவே முடியாது என்ற இக்கட்டான சூழ் நிலை உருவாகி விட்டதா..?

வலிய செல்லுதல் – வரம்பு மீறுதல் விளக்கம் என்ன?

வலிய செல்லாமலும் – வரம்பு மீறாமலும் என்பது உணவு வசனங்களில் வந்தாலும் ‘அந்த நிபந்தனை’ப் பொதுவானதாகும். விலக்கப்பட்ட எது ஒன்றை நோக்கியும் வலிய செல்லவும் கூடாது – வரம்பு மீறவும் கூடாது. அன்றைக்கு விவசாய – உணவுத் தட்டுப்பாடு அதிகம் இருந்ததால் அது குறித்து பேசும் வசனங்களில் அந்த நிபந்தனைகள் முன்வைக்கப் பட்டதே தவிர உணவுக்காக மட்டும் அவை முன் வைக்கப்படவில்லை.

இந்த நிபந்தனைப் பொதுவானதுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள இன்னுமொரு வசனத்தைப் பார்ப்போம்.

‘இறைவன் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்தியைத் தாண்டி நிர்பந்திக்க மாட்டான்.’ (அல் குர் ஆன் 2:286)

இங்கு குறிப்பிடப் படும் நிர்பந்தம் என்பது ‘உணவுக்குியது மட்டும் தானா.. அல்லது பொதுவானதா..’ நிச்சயம் பொதுவானதுதான். இந்த பொதுவானதற்குிய நிபந்தனைத்தான் – வலிய செல்லக் கூடாது – வரம்பு மீறக் கூடாது என்பதாகும்.

ஒருப் பெண் வலிய சென்று விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் – பிறரால் கட்டாயப் படுத்தப் பட்டு கற்பிழப்பதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னது வலிய செல்வது, பிந்தயது வலிய செல்லாமல் நிர்பந்திக்கப் படுவது. முந்தயதை செய்தால் குற்றம். பிந்தயதற்கு உட்படுத்தப் பட்டால் (2:173 – 6:145 – 2:285) ஆகிய வசனங்கள் அடிப்படையில் அவள் குற்றவாளியல்ல.

எனவே வலிய செல்லாமலும் – வரம்பு மீறாமலும் என்பது பொது நிபந்தனைத்தானே தவிர உணவு நிபந்தனை மட்டுமல்ல என்பது இப்போது விளங்கலாம்.

வங்கி கணக்கு எங்கள் வசதிக்காகத்தான் அந்த தேவையை தவிர்த்துவிட்டுக் கஷ்டப்பட முடியாது என்று சொன்னால் அந்த பிரச்சனையும் – விவாதமும் வேறாகும்.

தேவைக்காக வங்கியைப் பயன்படுத்திக் கொள்வதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்த பயன்பாடு வங்கி சார்ந்த பாவ புண்ணியங்களில் பங்கெடுத்துக் கொள்வோம் என்ற துணிச்சலுடன் வெளிப்பட வேண்டுமே தவிர ‘இது நிர்பந்தமான நிலை’ என்று பாசாங்கு பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

வங்கி என்பது உலக முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ள சட்டப் பிரச்சனையாகும். அதை நாம் காலம் கடந்து நம் மொழியில் மிக – மிக – மிக குறுகிய அளவில் இப்போதுதான் பேசத்துவங்கியுள்ளோம். அதிலும் ஒரு சிலரே!

எந்த பிரச்சனை (வங்கி கணக்கு) வட்டிக்கு அடித்தளமாக இருக்கிறதோ அங்கிருந்து துவங்குவதுதான் அறிவுடமை என்பதால் நான் அங்கிருந்து துவங்கியுள்ளோம்.

வலிய செல்லுதலும் – வரம்பு மீறுதலும் இங்கு நடக்கத்தான் செய்கின்றன. எனவே இஸ்லாம் எதை நிர்பந்தம் என்கிறதோ அந்த நிர்பந்த நிலையை வங்கி கணக்கு பெறவே பெறாது.

அல்லாஹ்வின் வசனங்களை விளங்கும் விஷயத்தில் அச்சம்மும், பேணுதலும், ஆழ்ந்த சிந்தனையும் இருக்க வேண்டும். ‘ஒரு கருத்தை நேரடியாக ஒரு வசனம் சொல்லும் போது அதை நாம் நேரடியாகதான் விளங்க வேண்டும். ‘வலிய செல்லாமலும் – வரம்பு மீறாமலும்’ என்பது மாற்றுக் கருத்துக் கொள்ள வழியில்லாமல் இரண்டு தனித்தனி நிபந்தனைகளை முன் வைக்கும் வசனமாகும். இதற்கு எதிர் மறையான பொருளோ – குத்துமதிப்பான பொருளோ கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. அந்த வசனமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

வங்கி என்பது கஷ்டமில்லாத ஒரு வாழ்வியல் தேவைக்கு வழிகாட்டியாக இருக்கிறது அதை தவிர்த்து விட்டு கஷ்டப்பட முடியாது என்று சொல்வதற்கு மனம் கூசுவதால் தான் இஸ்லாம் சொல்லாத ஒரு நிர்பந்தத்தை நாமாக நிர்பந்தமாக்கிக் கொண்டு சமாளிக்கிறோம்.

வங்கியும் – வங்கியின் வட்டியும் ‘என்ன செய்யலாம்?’

பொருமை இழந்து போய் அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் அதோடு சேர்ந்து படு வேகமாக இயங்க மனிதன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டதால் நேற்றைய – அதற்கு முந்திய நாள் வாழ்க்கையெல்லாம் இவனுக்கு மறந்து போய் நாளைய – அதற்கு அடுத்த நாட்களுடைய வாழ்க்கையே மனதில் பூதாகரமாக விரிந்து இவனை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுதான் ‘அவசர உலகம் எதிலெல்லாம் இவனை பிணைத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அதிலெல்லாம் இவ் தன்னைப் பிணைத்துக் கொண்டு அதிலிருந்து விடுபட முடியாமல் அதுதான் வாழ்க்கை என்று தீர்மானிக்கவும் பிறரிடம் நியாயம் கற்பிக்கவும் தலைப்பட்டு விடுகிறான். இவண் தன்னைப் பிணைத்துக் கொண்ட மோசமான வாழ்க்கை முறைகளில் ஒன்றுதான் ‘வங்கி’

சிந்தனைக்கு எட்டிய தூரம் வரை மாற்று வழி கிடைக்கவில்லை. வேறு வழியும் இல்லை என்ற வாதமே பெருவாரியான முஸ்லிம் செல்வந்தர்களை வட்டி தன்னுள் கதகதப்பாக அணைத்துக் கொள்வதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

வங்கியின் தேவை பலக் கோணங்களில் நியாயப் படுத்தப் பட்டாலும் அவற்றில் முக்கியமானது ‘பணத்திற்கு பாதுகாப்பு’

பணத்திற்கான பாதுகாப்பு என்பது பணம் வைத்துள்ள செல்வந்தர் அவர் குடும்பம் ஆகியவற்றின் மானம் – மரியாதை – வாழ்வியல் தேவை ஆகியவற்றின் உள்ளடக்கமாகும். தன் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் அது தன்னையும் தன் குடும்பத்தையும் பல வழிகளில் பாதிக்கும் என்ற எச்சரிக்கை உணர்வே ‘வட்டிக் கடையாக இருந்தாலும் பரவாயில்லை அதன் உதவியை நாடிவிடுவோம்’ என்று வங்கியை நோக்கி அவரை தள்ளி விடுகிறது. வங்கி கணக்கு திறந்தவுடன் அது கொடுக்கும் வட்டி விஷயத்தில் தடுமாறுகிறார்.

இஸ்லாம் வட்டி வாங்கக் கூடாது என்று சொல்லுவதால் ‘வங்கி வட்டியை வேண்டாம் என்று சொல்லி விடலாம்’ என்பது சிலரின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு எந்த விதத்திலும் நியாயமானதாகத் தெரியவில்லை.

இஸ்லாம் வட்டி வாங்க வேண்டாம் என்று மட்டும் சொல்லவில்லை மாறாக வட்டியோடு உள்ள அனைத்துத் தொடர்புகளையும் அறுத்துக் கொள்ளச் சொல்கிறது. அப்படி இருந்தும் ‘தனி மனித பாதுகாப்பு’ கருதி வட்டியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்பவர்கள் ‘சமூக பாதுகாப்பை’ கண்டுக் கொள்ளாமல் தன்னை ‘தக்வாதாரியாக’க் காட்டிக் கொள்வது பொருத்தமானது தானா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

‘தன் சொத்து – செல்வம் பிறரால் அழிக்கப் பட்டு தன்னை நிற்கதியாக ஆக்கிவிடக் கூடாது’ என்பதில் ஒரு முஸ்லிம் எவ்வளவு எச்சரிகையாக இருக்க வேண்டுமோ அதே போன்று பிறரை அழிக்க தனது செல்வமோ – செயலோ எந்த வகையிலும் துணைப் போகக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்களை கருவறுப்பதற்கும் – முஸ்லிம் பெண்களை எழுத கூசும் விதத்தில் படு கேவலமாக மானப்பங்கப்படுத்தி கொலை செய்வதற்கும் – வழிபாட்டுத்தலங்களையும் வாழ்வுரிமையையும் இல்லாமலாக்குவதற்கும் பன்னெடுங்காலமாக பன்முக திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீய சக்திகளுக்கு ஊக்கமளிப்பதற்கும் – பாதுகாப்பு அளிப்பதற்கும் அள்ளிக் கொட்டப்படும் மில்லியன் கணக்கான பணத்தில் ‘வங்கியின் வட்டிப் பணம்’ அளப்பறிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் விளங்கிதான் வைத்துள்ளோம்.

வங்கியை அணுகி பாதுகாப்பிற்காக பணத்தைப் போடும் முஸ்லிம்களின் பணம் ஹராமான வழியில் பயன்படுத்தப் படுவதோடு மட்டுமல்லாமல் வட்டி வேண்டாம் என்று சொல்வதன் மூலம் அவர்களிம் பணத்தின் மீது வந்து விழும் வட்டி பல வழிகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி அவர்களின் சமூகத்தை அழிப்பதற்கே செலவிடப்படுகிறது. தன் செல்வத்தின் மீது அக்கறை செலுத்தும் முஸ்லிகள் தன் சமூகத்தின் மீது அக்கறை செலுத்தாமல் பின் வாங்குவது இஸ்லாமிய வாழ்க்கை முறையா..?

இந்த மாதமும் – இடமும் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று ஒவ்வொரு முஸ்லிமின் பொருளும், மானமும், இரத்தமும் புனிதமானதாகும் என்று நபி(ஸல்) கடைசி ஹஜ்ஜின் போது எச்சரித்து சென்ற வார்த்தைகளை நாம் எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும்.

தனி மனித சொத்தை ஹராமான வழியில் பாதுகாப்பது நிர்பந்தம் என்றால் சமூகத்தின் மானத்தையும் சொத்தையும் பாதுகாப்பது அதைவிட நிர்பந்தம் இல்லையா..? இதற்கு பதில் என்ன?

நம் பணத்திற்கு வரும் வட்டியை வங்கியோடு விட்டு விடுவது பற்பல கெடுதிகளுக்கு வழி வகுக்கும் என்பதால் அதை வங்கியோடு விட்டு விடுவது நியாயமில்லை.

தனது சுய நிர்பந்தத்தை காரணம் காட்டி வங்கியில் கணக்கைத் துவங்குவோர் சமூகத்தின் மீது நிலவிக் கொண்டிருக்கும் நிர்பந்தத்தையும் – பதிப்பையும் கருத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம். வட்டியோடு தொடர்ப்பு வைத்துக் கொண்டுள்ள நிலையில் வட்டி வேண்டாம் என்று பேசுவது சமுதாய அழிவிற்கு ஒரு வகையில் துணைப் போகும் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தோம்.

வங்கியோடு வட்டியை விடக் கூடாது என்றால் நம்மீது வட்டி ஹராமான நிலையில் அதை என்ன செய்வது என்ற கேள்விக்கு இப்போது வருவோம்.

வட்டி குறித்து வரும் வசனங்களை சற்று ஆழமாக சிந்தித்தால் இதற்கு விடைக் கிடைத்து விடும்.
2:275 வது வசனத்தில் ‘வட்டியை உண்பது’ பற்றியும்,
3:130 வது வசனத்தில் ‘ பெருகும் வட்டியை உண்ணக் கூடாது’ என்பது பற்றியும்,
30:39 வது வசனத்தில் ‘செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக வட்டி வாங்கக் கூடாது’ என்பது பற்றியும்,
2:278 வது வசனத்தில் ‘ எஞ்சியுள்ள வட்டியை வாங்கக் கூடாது’ என்பது பற்றியும் இறைவன் சுட்டிக் காட்டியுள்ளான்
. வட்டியின் மூலம் (அதை வாங்குபவர்கள்) தன்னை வளப்படுத்திக் கொள்வதே இங்கு முழுமையாக தடைச் செய்யப் பட்டுள்ளது என்பதை அந்த வசனங்களின் பொருளை சிந்தித்தாலே விளங்கலாம்.

வங்கி கொடுக்கும் வட்டியை ஒருவன் தன் சொந்த தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக வாங்குகிறான் என்றால் அவன் இறைவனோடு போர் தொடுக்கும் அளவிற்கு பெரும் குற்றவாளியாகிவிடுவான். தன் தேவைக்காக இல்லாமல் பிற தேவைகளுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ள இஸ்லாம் ஏதாவது வழிகளை காட்டியுள்ளதா.. என்று சட்டங்களை அலசும் போது ‘ஒருவருக்கு ஹராமான பொருள் பிறருக்கு ஹலாலாகும் நிலை இருந்தால் அதைப் பெற்று அவருக்கு கொடுக்கலாம்’ என்பதற்கு ஆதாரம் கிடைக்கின்றது.

ஆண்களுக்கு பட்டுத்துணியை ஹராம் என்று அறிவித்த நபி(ஸல்) அவர்கள் ஒரு பட்டுத்துணியை உமர் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். ‘ஆண்களுக்கு பட்டு ஹராம் என்றீர்கள் இப்போது அதையே எனக்கு கொடுக்கிறீர்களே…’ என்று உமர்(ரலி) கேட்க ‘அது ஹலாலான பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்குக் கொடுங்கள்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி)

ஒருவருக்கு ஒரு பொருள் கிடைக்கிறது ஆனால் அது அவருக்கு ஹராமானப் பொருள் அதை அவர் பாழ்படுத்தி விடாமல் – வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளாமல் – அது பிறருக்குப் பயன்படுமா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

வங்கியின் வட்டி (வட்டி என்றே வைத்துக் கொண்டாலும்) நமக்கு ஹராம் என்றாலும் ‘இதுப் போன்றப் பணங்களில் எதுவும் ஹராமில்லை’ என்ற நிலையில் வறுமைக் கோட்டிற்கு மிக மிகக் கீழ் நம்மைச் சுற்றி லட்சக்கணக்கான ஏழைகள் வழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பணத்தைக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களின் வயிற்றுப் பசியும் போக்கப்படும் – சதி திட்டங்களுக்கு இந்த பணம் போவதும் தடுக்கப்படும். வட்டி தின்ற குற்றத்திற்கும் நாம் ஆளாக மாட்டோம்.

நாம் வட்டி வேண்டாம் என்றாலும் வட்டி வரத்தான் செய்யும் என்பதை இனி பார்ப்போம்.

வட்டி கட்டாயமே..!

பணத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது இன்ன பிற தேவைகளுக்காகவோ வங்கியை நாடுபவர்கள் தங்களுக்கு வட்டி வேண்டாம் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். வங்கியின் சட்ட விதியைப் பொருத்தே இதற்கு நாம் பதில் தேட வேண்டும்.

வங்கியில் கணக்கு வைப்பவர்கள் ‘வட்டி வேண்டாம்’ என்றால் இத்தகையோர் குறித்து வங்கியின் விதி என்ன கூறுகிறது என்பதை பார்க்கும் போது ‘ஒன்றுமே கூறவில்லை’ என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். அதாவது வங்கி சேமிப்பாளர்கள் விஷயத்தில் அவர்களின் பணத்திற்கு ஒதுக்கப்படும் வட்டி விகிதத்தில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். வட்டியே வேண்டாம் என்று சொல்லுபவர்களின் தொகைக்கு வட்டி ஒதுக்கப்படாது என்று வங்கி விதி ஏதாவது இருக்கிறதா..? என்றால் அப்படியெல்லாம் எந்த வங்கியிலும் சட்டம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சட்ட திருத்தம் என்று ஒன்று வங்கி விதியில் வந்தாலும் அப்போதும் இந்த ஆலோசனை நிராகரிக்கப் பட்டுவிடும் ஏனெனில் ‘வட்டி என்பதே வங்கியின் உயிர் மூச்சாகும்’ என்பதால் அதற்கு எதிராக எந்த தத்துவத்தையும் அது ஏரிட்டுக் கூட பார்க்காது.

வங்கி சேமிப்பு மீது ‘வட்டி கொடுக்கப் படாது’ என்ற விதி விலக்கான சட்டம் எதுவும் இல்லை எனும் போது ஒரு முஸ்லிம் வட்டி வேண்டாம் என்கிறார் இப்போது என்ன நடக்கும்?

உதாரணமாக வைப்புத்தொகை 5 லட்சம் உள்ள ஒரு முஸ்லிம் தனக்கு வட்டி வேண்டாம் என்ற நிலையில் உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இவர் வட்டி வேண்டாம் என்பதால் ‘இவரது தொகை மீது வட்டி வந்து விழாமல் இருக்காது.’ ஏனெனில் அப்படியெல்லாம் சட்டம் ஒன்றும் இல்லை. வட்டித் தொழிலில் முடக்கப் பட்ட இவரது 5 லட்சத்திற்கான வட்டித்தொகை அந்த பணத்திற்காக ஒதுக்கப்படவே செய்யும். அதாவது அவரது அசல் தொகையுடன் சேர்ந்து வட்டியும் அவரது பணமாகவே கருதப்படும். இன் நிலையில் ‘எனக்கு வட்டி வேண்டாம் என்று அவர் அறிவித்தால் ‘என் வட்டி பணத்தை என் விருப்பத்தோடு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற கருத்தே அங்கு உருவாகும்.

பணத்தின் மீது வட்டி சேராமலிருந்தால் தான் வட்டி வேண்டாம் என்று சொல்வதின் அர்த்தம் சரியாக இருக்கும். வட்டி வந்து சேரும் நிலையில் எனக்கு வட்டி வேண்டாம் என்றால் ‘என் வட்டியை நான் உனக்கு கொடுக்கிறேன் நீ எடுத்துக் கொள்’ என்று வட்டி வாங்கி அதைதான் வங்கிக்கு கொடுக்கிறோம்.

வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளும் போது நம் பணத்திற்கான வட்டியை நாம் வாங்குகிறோம் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ள வழியில்லை ஏனெனில் நம் பணத்திற்கு வட்டி வந்து சேரத்தான் செய்கிறது. இப்போது அந்த வட்டியை நாம் யாருக்கு கொடுக்கிறோம்? என்பதில் தான் பிரச்சனை.

வங்கியோடு விடும்போது அது நம் சமூகத்திற்கு எதிராக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் கூட அதை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் வாய்ப்புக் கூட இருக்கலாம். அல்லது முறையாக வங்கி தணிக்கையாளர்கள் தணிக்கை செய்யும் போது மேலதிகமாக கிடைக்கும் இந்த வட்டித் தொகையை அரசு வங்கிகளாக இருந்தால் அரசு கருவூலங்களிலோ, தனியார் வங்கியாக இருந்தால் அவர்களின் லாபத்தொகையிலோ சேர்ப்பிக்கப்படும் நிலைத்தான் உருவாகும். நமக்காக நமது பணத்திற்கு ஒதுக்கப்படும் வட்டியை வங்கியிலிருந்து எடுத்தால்,  ஹராம் ஹலாலாகும் நிலையிலுள்ள ஏழை மக்கள் ஓரளவு பயன் பெறுவார்கள். அதனால் தான் வட்டியை கண்டு அஞ்சும் உள்ளங்கள் அதை தம் தேவைக்கு பயன்படுத்தாமல் அதன்பால் தேவையுள்ளவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறோம்.

வங்கி வட்டி வேண்டாம் அதை பிறருக்கும் கொடுக்கக் கூடாது என்று ஒரு குர்ஆன் வசனம் கருத்தை முன் வைப்பதாக சில சிந்தனையாளர்கள் விளங்குகிறார்கள். அந்த வாதம் நியாயமானதா.. பார்ப்போம்.

2:267வது வசனம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்தவைகளில் நல்லவற்றையும், நாம் உங்களுக்கு வெளிபடுத்திக் கொடுத்தவற்றில் நல்லவற்றையும் செலவு செய்யுங்கள். கெட்டவற்றைத் தேடி அதிலிருந்து செலவு செய்யாதீர்கள். அத்தகைய பொருள் உங்களுக்கு கிடைத்தால் (வெறுப்புடன்) கண்ணை மூடிக்கொண்டுதான் அதை வாங்குவீர்கள்.

இது மிக ஆழமான அறிவுரை என்பதால் இந்த வசனத்தைப் பார்க்கும் எவருக்கும் ‘வங்கியின் வட்டியை’ செலவிடக் கூடாது என்ற சிந்தனையே தோன்றும். ஏனெனில் ‘கெட்டவற்றை செலவு செய்யாதீர்கள்’ என்ற அறிவுரை இந்த வசனத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

வங்கியோடு தொடர்பு கொண்டுவிட்டால் வட்டி கட்டாயம் நம் முதலோடு வந்து சேரும் என்பதையும், அதை நாம் பெறாவிட்டால் நம் அனுமதியுடன் அது மோசமான காரியங்களுக்கு செலவிடப் படுகிறது என்பதையும் மிக அழுத்தமாக முன்னரே விளக்கியுள்ளோம்.

2:267வது வசனப்படி ‘நல்லவற்றை செலவிட வேண்டும் என்றால் கட்டாயம் நாம் வங்கி கணக்கை தவிர்த்துத்தான் ஆக வேண்டும்’ நாம் வங்கியில் தொடர்பு வைத்துக் கொள்வதால் நம் பொருளாதாரத்தில் ஒரு பகுதியில் தீயது வந்து கலக்கவே செய்கிறது. அதை நாம் வேண்டாம் என்றாலும் நம் அனுமதியுடன் பல தீயக் காரியங்களுக்கு அது செலவிடவே படுகிறது. அதாவது வங்கியில் கணக்கு வைப்பதின் வாயிலாக 2:267 வசனத்திற்கு மாற்றமாக தீயதை சம்பாதித்து தீயவற்றிற்கு செலவிடத்தான் செய்கிறோம்.

இப்படி நாம் கூறும் போது வங்கி கணக்கை நியாயப் படுத்துவோர் ‘அது எங்களுக்கு நிர்பந்தம் ‘ என்ற வாதத்தையே முன் வைப்பார்கள். (வங்கி கணக்கில் எத்தகைய நிர்பங்தமும் இல்லை என்பது நமது நிலைப்பாடு என்றாலும்) உண்மையிலேயே அதை நிர்பந்தமாக வைத்துக் கொண்டாலும் தனி மனித நிர்பந்தத்தை விட சமூக நிர்பந்தம் இன்னும் ஆழமான பிரச்சனைகளைக் கொண்டதாகும் என்பதை சுட்டிக் காட்டி இருந்தோம்.

‘ நிர்பந்தம் என்ற நிலையில் நாம் இந்த பிரச்சனையை அணுகினால் 2:267 வது வசனத்தை இங்கு பொருத்திப் பார்க்க முடியாது ஏனெனில் ‘ நிர்பந்தம் வரும் போது ஹராமானவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.

நிர்பந்தம் இல்லை என்றால் வங்கியிலிருந்து விடுபட்டு விட்டு இந்த வசனத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.

இந்த வசனத்தை நாம் இன்னும் தெளிவாக புரிந்துக் கொள்வோம்.

நம்மை நம்முடைய நண்பர் விருந்துக்கு அழைத்து சென்று ‘தண்ணீர் ஊற்றிய பழைய சோற்றை’ நமக்கு கொடுத்தால் நாம் முகம் சுழிப்போம். ஆனால் நாமே சில நேரங்களில் பசியினால் பழையதை சாப்பிடும் நிலை ஏற்படும்.

‘முகம் சுழித்தல் என்பதும் – கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளுதல் என்பதும்’ நாம் நல்ல நிலையில் இருக்கும் போது நமக்கு வரும் கெட்டவற்றைக் குறிப்பதாகும்.

‘நெருக்கடியில் இருக்கும் போது யாரும் தமக்கு வருவதை பரிசீலித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் – பரிசீலிக்கத் தேவையில்லை. 2:267 வது வசனத்தில் ‘கண்ணை மூடிக் கொண்டேயல்லாமல்’ என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து அது நல்ல நிலையை குறிக்கும் வசனம் என்பதை விளங்கலாம்.

‘சோமாலியா உட்பட வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் போரினால் சிதைக்கப் பட்ட பகுதிகள். உள் நாடுகளிலேயே வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் இவர்களில் எவரும் தமக்கு வருவதை கண்டு முகம் சுளிக்க மாட்டார்கள். நல்ல நிலையில் இருக்கும் நாம் ‘சிலதைக் கண்டு’ முகம் சுளிக்கலாம். அதை எல்லோருக்கும் பொருத்திக் காட்டக் கூடாது.

வங்கி வட்டியை வங்கிக்காரர்களிடம் கொடுப்பதா… வறுமையில் உழர்பவர்களிடம் கொடுப்பதா…. என்பதுதான் பிரச்சனை. அது நல்லதா.. கெட்டதா என்பதல்ல பிரச்சனை. கெட்டது என்று தெரிந்துதான் அதில் இணைகிறோம். கெட்டதை என்ன செய்யலாம் என்பது பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

எனவே நிர்பந்தம் என்றெண்ணி வங்கியில் கணக்கு வைப்பவர்கள் தமது வங்கி இருப்பில் வந்து சேரும் வட்டியை எடுத்து தமது சொந்தத் தேவைகளுக்கு பயன்படுத்தாமல் பசி பட்டினியில் உழன்றுக் கொண்டிருக்கும், ஒதுங்குவதற்கு ஒரு இடம் கூட இல்லாமல் ரோட்ரோடங்களில், நடைப்பாதைகளில் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பார்ப்பதற்கே பரிதாபப்பிறவிகளாக வாழும் அந்த மனித சகோதர, சகோதரிகளுக்கு கொடுத்து விடலாம். இதனால் நமக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் கூட அந்த மக்களின் வாழ்க்கை சில நாட்கள் (தொகையை பொருத்து சில மாதங்கள், வருடங்கள்) சந்தோஷமாக கழியும். (இறைவன் மிக்க அறிந்தவன்)

இந்தக் கட்டுரைப்பற்றிய உங்களின் ஆதரவான, எதிரான கருத்துக்கள் அனைத்தையும் எதிர்பார்க்கிறோம். எதிர்வாதங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் விமர்சனங்களாக சமர்பியுங்கள்.

———————————————— 

இதுதான் இஸ்லாம் வாசகர் வட்டம்

நன்றி: இதுதான் இஸ்லாம்.காம்

Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »

நபி(ஸல்) கனவில் வர மாட்டார்கள்

ஒரு மனிதர் இறை நேசராக ஆகுவதற்குரிய அடையாளங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண்பதாகும் என்று முஸ்லிம்களில் பலர் நம்பிக் கொண்டிக்கிறார்கள். சில புத்தங்களில் கூட இந்தக் கருத்தை எழுதியும் வைத்துள்ளார்கள்.

ஒரு மனிதர் ‘நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன்’ என்று கூறினால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மத்தியில் அவர்மீது மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் கூட கூடுகிறது. அவர் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று கூட முஸ்லிம்களில் பலர் எண்ணிக் கொள்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மீது தங்கள் உயிரை விட அதிக மதிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களை காண முடியாததை பெரும் இழப்பாகவே கருதி வருகிறார்கள். இந் நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது அவர்களைப் பொருத்தவரை பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இதனால் கூட நபியை கனவில் கண்டதாக கூறும் நபரின் அந்தஸ்து கூடுகிறது.

நபியை நேரில் காண்பதாலோ அல்லது கனவில் காண்பதாலோ ஒருவருக்கு மார்க்க ரீதியாக எத்தகைய பலனும் ஏற்படப் போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த போது நேரில் பார்த்த எத்துனையோ பேர் ஈமான் கொள்ளவில்லை. நேரில் பார்த்து ஈமான் கொண்டவர்களில் சிலர் கூட அவ்வப்போது சந்தர்ப்பவாதிகளாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுவெல்லாம் வரலாற்று உண்மை. எனவே ஒருவர் நபியைக் காண்பதால் அவரிடம் இறைநம்பிக்கை மற்றும் கொள்கை ரீதியாக எத்தகைய முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரத்யேகமாக முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் காண்பது பற்றி முஸ்லிம்களிடம் ஒரு உணர்ச்சிப் பூர்மான மனநிலை நீடிப்பதற்கு காரணம் கீழே இடம் பெறும் ஹதீஸ்களேயாகும்.

என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னையேக் கண்டார் என் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்பது நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி (முஸ்லிம் – திர்மிதி)

இந்தக் கருத்தை வலியுறுத்தி வார்த்தை மாறாமல் புகாரியில் ஏராளமான இடங்களில் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் ‘என்னைக் கனவில் கண்டவர் என்னையேக் கண்டார்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ‘ஒருவர் ஒரு கனவுக் காண்கிறார். அதில் ஒரு மனிதர் வருகிறார் நான் தான் முஹம்மத் இறைவனின் தூதர்’ என்றுக் கூறுகிறார். சில கட்டளைகளை இடுகிறார் (மதினாவில் கனவுக் கண்டு வினியோகிக்கப்பட்ட நோட்டீஸ்கள் இதற்கு உதாரணம்) கனவில் வந்தவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்து விட்டதால் கனவுக் காண்பவர் ஏகத்துக்கும் அக மகிழ்ந்து கனவின் கட்டளையை சிரம்மேல் கொண்டு செயல்படுத்த முனைவதோடு இறைத்தூதரைக் காணும் பாக்கியம் கிடைத்து விட்டதால் தன்னை மதிப்பிற்குரியவராகவும் கருதத் துவங்கி விடுகிறார். தனக்கு வந்த ஒரு கனவை ஆதாரமாக் கொண்டு அதன் பின்னர் மார்க்கக் காரியங்களில் மனதில் தோன்றியதையெல்லாம் செய்ய துணிந்து விடுகிறார்.

இதற்காக அவர் எடுத்து வைக்கும் வாதம் ‘நான் இறைத்தூதரைக் கனவில் கண்டேன். வந்தது இறைத்தூதர் தான் ஏனெனில் ‘என் வடிவில் ஷெய்த்தான் வர மாட்டான்’ என்று அவர்களே கூறியுள்ளதால் கனவில் வந்தது நபி(ஸல்) அவர்கள் தான்.’ என்ற வாதமே அவரிடமிருந்து வெளிப்படும்.

கனவில் மார்க்கக் காரியங்களோ, கட்டளைகளோ வர முடியாது என்பதை நாம் ஏற்கனவே ‘வண்ண வண்ணக் கனவுகள்’ கட்டுரையில் தக்க ஆதாரங்களுடனும் தகுந்த வாதங்களுடனும் விளக்கியுள்ளோம். இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபி(ஸல்) கனவில் வந்து மார்க்க விஷயங்களை அறிவிப்பதாக நம்புவது அவர்களின் தூதுத்துவப் பணிக்கே இழுக்கு என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும்.

அப்படியானால் கனவில் நபி(ஸல்) அவர்கள் வருகிறார்கள். சில காரியங்களைச் சொல்கிறார்கள் என்பதன் நிலவரம் தான் என்ன?

முதலில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் என்ன சொல்கிறது என்பதை விளங்குவோம்.

குறிப்பிட்ட ஹதீஸில் ‘என் வடிவில் ஷெய்த்தான் வராமட்டான்’ என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். ‘என் வடிவில்’ என்பதில் தனது வடிவத்தை நபி(ஸல்) பிரதானப்படுத்தியுள்ளதால் அவர்களின் வடிவில் ஷெய்த்தான் வர முடியாது என்பது தான் உண்மையே தவிர வேறு வடிவத்தில் வந்து நபி(ஸல்)அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடையில்லை. தடுக்கப்பட்டுள்ளது முஹம்மத்(ஸல்) அவர்களின் வடிவம் தானே தவிர அவர்களின் பெயரல்ல.

கனவில் வரக் கூடிய ஷெய்த்தான், மக்கள் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கற்பனை செய்து வைத்துள்ள வடிவில் வந்து ‘நான் தான் முஹம்மத்’ என்று சொல்லுவதற்கு தங்கு தடையின்றி வாய்ப்பு உண்டு. முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் கண்டதாகக் கூறுபவர்களிடம் ‘அவர்கள் எப்படி இருந்தார்கள்’ என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அவர்கள் வர்ணிக்கும் வர்ணனைக்கும் நபி(ஸல்) அவர்களின் உருவ அமைப்புப் பற்றி வரும் அறிவிப்புகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமிருக்காது.

நபி(ஸல்) கனவில் வந்தார்கள் என்பது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமான வாதம் என்றாலும் ‘தன் உருவில் ஷெய்த்தான் வரமாட்டான்’ என்று சொன்ன நபி(ஸல்) இது பற்றி கூடுதலாக விளக்கியுள்ளதையும் இங்கு எடுத்துக் காட்டுவோம்.

‘யார் என்னைக் கனவில் கண்டாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என் வடிவில் ஷெய்த்தான் வரமாட்டான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா (ரலி) புகாரி,முஸ்லிம்.

கனவில் என்னைக் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது ஒரு முன்னறிவிப்பாகும்.

நபி(ஸல்) அவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும் போது காணக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள் அல்லது காணும் வாய்ப்பைப் பெறுபவர்கள் இவர்களுக்கான முன்னறிவிப்புதான் அது.

பொதுவாக எல்லா காலக்கட்டத்திலும் நபி(ஸல்) அவர்களைக் கணவில் காண முடியும் என்று யாராவது வாதிட்டால் ‘அவர் என்னை நேரிலும் கண்பார்’ என்று நபி(ஸல்) சொன்னதை அவர் பொய் படுத்தி விடுகிறார் என்ற நிலைதான் உருவாகும்.

‘அவர் விழிப்பிலும் (நேரிலும்) என்னைக் காண்பார்’ என்ற அறிவிப்பிலிருந்து நேரில் காணும் வாய்ப்பில்லாத எவரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது என்பதை தெளிவாக விளங்கலாம்.

எனவே இன்றைக்கு யாரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது. யாராவது கனவில் கண்டதாகக் கூறினால் நபி(ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி ஷெய்த்தான் அவரிடம் விளையாடியுள்ளான் என்பதை சட்டென்று புரிந்துக் கொள்ள வேண்டும். அதை அவருக்கு விளக்கவும் வேண்டும்.

நபி(ஸல்) கனவில் வந்து ‘நீ இஸ்லாத்தைத் தழுவு’ என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானதாகும். இஸ்லாம் என்பது உலக மக்களுக்கென்று ஒரு கொள்கையை முன் வைத்துள்ளது. அந்தக் கொள்கைப் பற்றி விவாதிக்கச் சொல்கிறது – விளக்கம் பெறச் சொல்கிறது. அது சரி என்று விளங்கும் பட்சத்தில் அதை ஏற்று முஸ்லிமாக சொல்கிறது. ஒருவரின் தோற்றமோ அவர் இடும் கட்டளையோ இஸ்லாத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலல்ல.

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். (அல் குர்ஆன் 4:113)

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் (அல் குர்ஆன் 4:115)[/b]

இந்த இரண்டு வசனங்களையும் படித்து சிந்தியுங்கள். இறை நம்பிக்கை என்பது இறை அருளால் அவன் கற்றுக் கொடுக்கும் கல்வியால் ஏற்படுவதாகும் என்பதை இந்த வசனங்கள் சுட்டிக் காட்டுகிறது. முதலாவது வசனத்தில் ‘நபியே.. நீர் அறியாமலிருந்தவற்றை அவன் கற்றுக் கொடுத்தான்’ என்கிறான். இரண்டாவது வசனத்தில் ‘நேர்வழி இன்னதென்று தெளிவாக தெரிந்தப் பின்னர்..’ என்கிறான். நேர்வழிப் பெற வேண்டுமானால் அதன் கொள்கையைக் கற்க வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கனவில் வந்து ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்’ என்று கூறுவதெல்லாம் ஒரு கொள்கையை விளக்கும் முறையோ – அழகோ கிடையாது. இஸ்லாம் அதை விரும்பவும் இல்லை.

நபி(ஸல்) கனவில் வந்து கட்டளையிட்டார்கள், இஸ்லாத்தை ஏற்கும் படி கூறினார்கள் என்று எடுத்து வைக்கும் இதே வாதங்கள் கிறிஸ்த்தவர்களிடமும் இருக்கிறது. கிறிஸ்த்துவத்தை தழுவுபவர்களில் கனிசமானவர்கள் ‘ஏசுவை நான் கனவில் கண்டேன். அவர் தான் என்னை கிறிஸ்த்துவத்திற்கு வரும்படி கூறினார்’ என்றே கூறுகிறார்கள். இஸ்லாத்தை போதிக்க வந்த ஈஸா(அலை) (இயேசு) இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையின் பக்கம் யாரையும் அழைப்பார்களா.. ஆனால் அந்த மக்கள் ‘கனவில் வந்தது இயேசு தான்’ என்று நம்புகிறார்கள். இது போன்ற கொள்கையற்ற நம்பிக்கைகள் இஸ்லாத்தில் தனது பெயரால் வந்து விடக் கூடாது என்பதால் தான் ‘என்னைக் கனவில் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார்’ என்று முன்னறிவிப்பு செய்து வெறும் கனவை ஆதாரமாகக் கொள்ள வேண்டாம் என்பதை அறிவுறுத்திச் சென்றுள்ளார்கள். எனவே நபி(ஸல்) கனவில் வருவார்கள் என்று நம்புவது ஆதாரமற்ற வெறும் யூகமேயாகும்.[/align]

ஆக்கம்: ஜி.நிஜாமுத்தீன்

நன்றி: இதுதான் இஸ்லாம்.காம்
………………………………………..
_________________
வாசகராய் வருக

வாசகர் வட்டத்தில் இணைக

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 1 Comment »